மூன்றாவது முறையாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றியடைய வேண்டியும், கோவையில் போட்டியிடும் அண்ணாமலை வெற்றி அடைய வேண்டியும், இந்துக் கடவுள்களை கேவலமாக பேசிய இந்து விரோத கட்சிகள் படு தோல்வி அடைய வேண்டியும், கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயிலில் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் சார்பில் அங்க பிரதட்சிணம் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இந்த நிலையில் சாமி தரிசனம் செய்வதற்கும், அங்க பிரதட்சிணம் செய்வதற்கும் காவல்துறையினர் விதிமுறைகள் மீறல் என்று கூறி அனுமதி மறுத்தனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்
Leave a Reply