கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 4 பேரிடம், சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியின் போது, ஓம்பகதூர் என்ற காவலாளி படுகொலை செய்யப்பட்டதை சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மற்றும்மாரு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திய நபர்களை மீண்டும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு அதில் நேரடி ஆய்வு செய்திருந்தனர்.
இந்நிலையில் ஓட்டுநராக பணிபுரிந்த ரமேஷ், தேவன் மற்றும் ரவிக்குமார், அப்துல் காதர் ஆகிய 4 பேரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறினார் இதன் அடிப்படையில் 4 பேரும் கோவையில் உள்ள பிஆர்எஸ் மைதானத்தில் சிபிசிஐடி போலீஸார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அவர்களிடம் கொள்ளை நடந்த போது நிகழ்ந்த சம்பவங்கள்ளை விசாரணை நடத்தி, இந்த வழக்கில் சாட்சியங்கள் மட்டுமின்றி, டிஜிட்டல் ஆவணங்களை திரட்டவும் சிபிசிஐடி போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் சிபிசிஐடி போலீஸார் தங்களது விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடநாடு கொள்ளை வழக்கு நான்கு பேர் ஆஜராகின்றனர்

Leave a Reply