கோவை மாவட்டம் உடையாம்பாளையம் சாலையில் உள்ள கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழா (ஜூன் 28) அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள மாரப்பா ஜி.ஆறுச்சாமி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவரும் ஸ்பேஸ் கமிஷன் உறுப்பினருமான ஏ.எஸ்.கிரண் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தலைமை உரையாற்றிய கல்லூரியின் செயலாளரும் இயக்குனருமான டாக்டர் சி.ஏ.வாசுகி தனது உரையில், விண்வெளி தொழில்நுட்பத்தில் இஸ்ரோ நிகழ்த்தி வரும் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கல்லூரியின் முதல்வர் டாக்டர் வி.சங்கீதா தனது உரையில், கல்லூரியின் தோற்றம் மற்றும் முன்னேற்றம் குறித்து விளக்கினார். கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் நிகழ்த்திய வியத்தகு சாதனைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
சிறப்புரையாற்றிய இஸ்ரோ முன்னாள் தலைவரும் ஸ்பேஸ் கமிஷன் உறுப்பினருமான ஏ.எஸ்.கிரண் குமார் தனது உரையில், புயல் வருகை மற்றும் அதன் தன்மை குறித்து அறிந்து கொள்ள செயற்கைக்கோள்கள் மிகவும் உதவுகிறது என்றும் இதனால் உயிர் இழப்புகள் மிகுதியாக குறைந்துள்ளது என்றும் கூறினார். விண்வெளி தொழில்நுட்பத்தை தேச நலனுக்காக இந்தியா தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், செவ்வாய் கிரகம் மற்றும் நிலவில் இந்திய விண்கலங்கள் நிகழ்த்தியுள்ள வியத்தகு சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். விண்வெளி தொழில்நுட்பத்தில இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மாணவர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறி மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பட்டமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், 834 யூ ஜி மாணவர்கள் 211 பி ஜி மாணவர்கள் என மொத்தம் 1057 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் 12 மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் முதன்மை இடங்களை பெற்றுள்ளனர்.
Leave a Reply