கே.பி.ஆர் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

graduation day
Spread the love
கோவை  கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் 2020 – 2023ம் கல்வியாண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு  பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில்  நடைபெற்றது.  விழாவினை கே.பி.ஆர்  கல்வி நிறுவனங்களின் செயலர்  காயத்ரி அனந்தகிருஷ்ணன்  தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர்  பி.கீதா  ஆண்டறிக்கையை வாசித்தார். கே.பி.ஆர் கல்வி குழுமங்களின் தலைவர்  கே.பி.ராமசாமி  இந்த நிகழ்வில் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக
கிராப்டன் இந்தியா மக்கள் தொடர்பு செயற்பாட்டாளர் சவ்ரப்ஷ  கலந்து கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் 528 மாணவர்கள் பட்டம் பெற்று உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் வணிகவியல் டீன்    கு.குமுதாதேவி , கணினிஅறிவியல் டீன்  பி.சர்மிளா மற்றும் மேலாண்மையியல் டீன்  ஆனந்த் ஜெரால்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.