கேஎம்சிஹெச் மருத்துவமனை தனது அவசர கால மருத்துவத் துறை சார்பாக கருத்தரங்கு மற்றும் பயிற்சி வகுப்பு ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தது.
அதன்படி இர ண்டாவது விபத்து சிகிச்சை கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பானது அம்டெக் என்ற பெயரில் நடைபெற்றது.
அப்போது விபத்துகால நிர்வாகம் குறித்த விவாதங்கள், கலந் துரையாடல்கள் மற்றும் விபத்துக்கால சிகிச்சைகள் குறித்த நேரடி செயல் விளக்கம் முதலானவை நடை பெற்றன.
மேலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.
கேஎம்சிஹெச் மருத் துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி மருத்துவ தொடர் கல்வி திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ஊக்கமளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி,
டாக்டர்.வி ராமகி ருஷ்ணன் – துறை தலைவர், எமர்ஜென்சி மெடிசின், எஸ் ஆர் எம் சி , சென்னை, டாக்டர் டி.எஸ்.ஸ்ரீநாத் குமார் – சீனியர் கன்சல்டன்ட் & குரூப் ஹெட், ஸ்பார்ஷ் குரூப் ஆஃப் ஹாஸ்பிடல்ஸ், பெங்களூர், டாக்டர் சௌஜன்யா பதிபண்ட்ல – சீனியர் கன்சல்டன்ட் & எச்ஓடி எமர்ஜென்சி மெடிசின், யசோதா ஹாஸ்பிடல்ஸ், ஹைடெக் சிட்டி, ஹைதராபாத் கலந்து கொண்டனர்.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் விபத்து சிகிச்சை குறித்த கருத்தரங்கம்

Leave a Reply