,

கேரள ஆறுகளில் குளித்தால் அபராதம் – கேரள அரசு அறிவிப்பு

river
Spread the love

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனாலும் வெப்ப அலை வீசுவதாலும் கோடை விடுமுறையொட்டி பொதுமக்கள்  குடும்பத்துடன்  கேரளா மாநிலத்தின்  சுற்றுலாதலமான ஆனைகட்டி மற்றும்  அட்டப்பாடி பகுதியில் ​குவிந்த வண்ணம் உள்ள​னர்.  வெயிலின் தாக்கத்தை குறைக்க அங்குள்ள ஆறுகளுக்கு சென்று ​தங்களை குளிர்விக்கின்றனர்.  இதனால் ஆற்றுநீர் மாசு அடைவதால்​ இந்த பகுதிகளில் உள்ள ஆறுகளில் குளிக்க கேரள அரசு தடை விதித்துள்ளது​. மேலும் ​ஆறுகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை என்று​ம்  குளிப்பவர்களுக்கு​ 10,000 முதல் 50,000​ வரை அபராதத் தொகை​யும் மற்றும் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 18 மாதங்கள் வரை சிறை தண்டனை​யும் விதிக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால் குடும்பத்துடன் கேரளா செல்லும்​ சுற்றுலா ​யணிகள் மிகவும் ஏமாற்ற​ம் அடைந்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *