கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கிட்டாம்பாளையம் ஊராட்சி சேர்ந்த குளத்து பாளையம் கிராமத்தில் அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த மூன்று நாட்களாக விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை லோகுவின் கீதம் இசை குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாடகர் லோகு, சிவராமன், சுந்தரம், ராஜன், பூபதி, வெங்கடாசலம், சுரேஷ் மற்றும் பாடகிகள் தாமரை, செல்வி, தேவி, சுதா ஆகியோர் எம்ஜிஆர், சிவாஜி, விஜய், தனுஷ், விஜயகாந்த் ஆகியோர் நடித்து வெளிவந்த படங்களில் இருந்து பாடல்களை பாடினார்கள். இந்த நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் வி எம் சி சந்திரசேகரன் தலைமை தாங்கி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு பட்டத்தரசி மாரியம்மன் கோவில் நிர்வாகி சின்ன ரங்கன், பழனிச்சாமி, முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்
Leave a Reply