குளங்களில் கழிவு நீர் தேங்காமல் தடுக்க நல்ல தண்ணி திட்டம் சிறுதுளி அறங்காவலர் வனிதாமோகன் நடவடிக்கை

vanithamohan
Spread the love

கோவையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி அமைப்பு , நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் தேசிய அளவில் புகழ்பெற்றது, நகரின் பல நீர்நிலைகளை தொடர்ந்து மாசுபடுத்தும் கழிவுநீரை திறம்பட சுத்திகரிக்க கோவை மாநகராட்சிக்கு 4 நிலையான தீர்வுகளை பரிந்துரைத்துள்ளது. ‘நல்ல தண்ணி’ முயற்சியின் கீழ் சிறுதுளியால் இந்தத் தீர்வுகளைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் திட்டங்களின் விளைவுகளை எடுத்துக்காட்டுவதற்காக கடந்த 9ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற் றது.
சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக கோயம்புத்தூரில் ஏராள மான நீர் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை மறுசீரமைப்பு பணிகளைச் செய்து அற்புதமான முடிவுகளைக் கண்டிருந்தாலும், கிட்டத்தட்ட அனைத்து நீர்நிலைகளிலும் கழிவுநீர் கலப்பதைக் தடுக்க முடியவில்லை.
காலப்போக்கில், நகரத்திலிருந்து வரும் கழிவுநீர் நமது நீர்நிலைகளுக்குள் நுழையத் தொடங்கி யுள்ளது.
ஏரிகளில் அதிகப்படி யான கழிவுநீர் இருப்பதால் மழைநீர் குறைந்தபட்ச அளவில் மட்டுமே நீர்நிலை களுக்குள் செல்கிறது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நமது ஏரிகள் ஆழமாக இருப்பதால், கழிவுநீருடன் கலக்கும் நீர் தரையில் சென்று, தேங்கி விடுகிறது. ஆழ்துளை கிணறுகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிக்கைகள் அதிர்ச்சி யூட்டும் முடிவுகளைத் தருகின்றன. சிறுதுளி கடந்த நான்கு முதல் ஐந்துஆண்டுகளாக சாத்தியமான கழிவுநீர் சுத்திகரிப்பு தீர்வுகளை ஆய்வு செய்து வருகிறது, இதன் விளைவாக கடந்த ஆண்டு “நல்ல தண்ணி” திட்டம் தொடங்கப் பட்டது. இந்த முயற்சி கழிவுநீரை திறம்பட மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் சுத்திகரிப்பதில் கவனம் செலுத்துகிறது என்றார்.
சிறுதுளியின் அறங்கா வலர் சதீஷ் பேசுகையில், தண்ணீரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வளமாக பார்க்கக்கூடாது . முறையான சுத்திகரிப்பு மூலம், பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கட்டுமானம், விவசாயம், தோட்டக்கலை, தொழில்துறை செயல் முறைகள், சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு குடிநீரல்லாத நோக்கங்களுக்காக மறுசுழற்சி செய்யலாம் என்று தெரிவித்தாம். சிறுதுளியின் வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினரும் அதன் கழிவு நீர் சுத்தி கரிப்பு திட்டங்களின் தலைவரு மான கிருஷ்ணசாமி, தன்னார்வ தொண்டு நிறுவனம் பரிந்துரைத்த 4 முக்கிய தீர்வுகளை வழங்கினார். அவற்றை பார்ப்போம்.
கோவை மாநகராட்சி கழிவு நீரை சுத்திகரிப் பதற்காக பல இடங்களில் கழிவு நீரை சுத்திக்கரிப்பு நிலையங்களை அமைத்துள்ளது. இது தவிர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான குளங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்கள் அமைக்கப்பட்டிருக் கின்றன, இருந்தபோதிலும் குறைந்த அளவு கழிவுநீரயே நம்மால் சுத்திகரிப்படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் தங்களின் தேவைகேர்ப்ப நீரை உபயோகிப்பது இதற்கு சிறந்த தீர்வாகும்.
சுண்டபாளையம் பெரிய பள்ளத்தில் வெட்டிவேரை பயன்படுத்தி கழிவு நீரை சுத்திகரிக்கும் முறை ஆய்வு செய்யப் பட்டுள்ளது .
இத்திட்டதில், நல்ல முன் னேற்றம் காணப்படுகிறது. இதன் சம்பந்தமாக தொழில் நுட்பக் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் கீழ் இயங்கும் கங்கா ஆற்றுப்படுபை சுத்திகரிப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை குறிச்சி குளத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரித்து செய்யல்படுத்த ஒருங்கிணைத்து வருகிறது. சிங்காநல்லூரிலுள்ள எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் வழியாக ஓடும் கழிவு நீரோடையில் மாதிரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டு அதன் செயல்திறன் ஆராயப்பட்டு வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு 2025-26 ஆம் ஆண்டு செயல் படுத்தப்படவுள்ளது.
நஞ்சுண்டாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யத்திலிருந்து 10 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை சிங்காநல்லூர் குளத் தில் நிரப்ப மாநகராட்சி ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பைகோ ரெமீடியேஷன் எனப்படும் முறை கோவை மாநகராட்சியின் வார்டு 14ல் உள்ள உருமண்டம் பாளை
யம் குட்டையில் செயல்
படுத்தப்பட்டு அதன் நன்மைகளை ஆய்வுசெய்து வருகிறது. கோவை மாநகராட்சியின் வார்டு 14ல் உள்ள வெள்ளகினர் தெற்குச் சோலை குட்டையில் பயோ ரெமிடியேஷன் முறையில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்கான வேலைகளை செய்து வருகிறது.