குரு சித்தானந்த சுவாமிகளின் அற்புதங்கள்

guru sidhanandha swamigal
Spread the love

குரு சித்தானந்தா சுவாமிகள் கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் என்ற ஊரில் வாழ்ந்த சித்தராவார்.
இவர் வண்டிப்பாளை யத்தில் வீர சைவ மரபில் பிறந்தார். இவரது வீட்டினை பிள்ளையார் வீடு என்று அழைத்தனர். இவர் சிறுவயதிலேயே திருப்பாதிரிப்புலியூர் பாடலீசுவரர் கோயிலுக் குச் சென்று வழிபட்டு வந்துள்ளார்.
இச்சிவாலயத்தில் பூத்தொடுக்கும் பணியை இவரது தாயார் செய்து வந்துள்ளார். அதனால் திருக்கோயிலுக்கு மாலையை கொடுக்கும் பணி இவருடையதாக இருந்தது.
ஒருநாள் மழை காரணமாக உரிய நேரத் தில் மாலையை கொண்டு சேர்க்க முடியவில்லை. இவர் கோயிலுக்கு வருகையில் நடை சாத்தப் பட்டிருந்தது. அதனால் கோயில் கதவில் மாலையை வைத்துவிட்டு, இறைவனிடம் “வந்து எடுத்துக் கொள்” என கூறி வீடு திரும்பினார். மறுநாள் அர்ச்சகர் கோயில் கதவு திறந்து உள் சென்று பார்க்கையில் மூலவர் மாலையுடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
விளையாட்டாக சித்தானந்த சுவாமிகள் எது சொன்னாலும் அது உண்மையே ஆயிற்று. அவர் எங்கு நின்றாலும், எதைத் தொட்டாலும் அங்கே பொன் விளைந்தது. மக்கள் அவரை ஒருமுறை தரிசனம் செய்தால் அவர்கள் பிரச்சினைகள் சுலபத்தில் தீர்வு கண்டன.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டையில் வாழ்ந்து வந்தார் முத்துக்கு மாரசாமிப் பிள்ளை. அவரது மனைவிக்குத் தீராத வயிற்றுவலி. யாரோ சொன்னார்கள்- சித்தானந்தர் வீட்டுக்குள் வந்தால் வயிற்று வலி உடனே சரியாகிவிடும் என்று நம்பிக்கையோடு சித்தானந்தரைத் தேடி கடலூர் வந்தார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை. விஷயத்தைச் சொல்லிலி அவரைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
சித்தானந்தர், “அதற்கென்ன புறப்படுவோம்’ என உடன் கிளம்பினார். அவர் புதுச்சேரியில் பிள்ளை வீட்டுக்குள் நுழைந்த மறுகணம் பளிச் என்று வயிற்றுவலிலி முற்றிலுமாக நீங்கி எழுந்து உட்கார்ந்தாள் பிள்ளையின் மனைவி. அதுவரை வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த அவள் அளவற்ற நிம்மதி அடைந்தாள்.
சற்று யோசித்த அவள் சித்தானந்தரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தாள். “சாமீ! நீங்கள் எங்கள் வீட்டிலேயே சிலகாலம் தங்கலாகாதா?’ என்பதே அந்த வேண்டுகோள்.
இதற்கான காரணங்கள் இரண்டு. சுவாமிகள் தன் இல்லத்தில் தங்க வேண்டும் என உண்மையிலேயே பக்திப்பூர்வமாக அவள் விரும்பினாள் என்பது ஒன்று. சுவாமிகள் தன் வீட்டை விட்டுச் சென்றால் தன் கொடும் வயிற்றுவலி எங்கே மறுபடி வந்துவிடுமோ என அஞ்சினாள் என்பது இன்னொன்று. அவள் எண்ணத்தைப் புரிந்துகொண்ட சுவாமிகள் நகைத்தார். “”மகளே! உன் வயிற்று வலி மீண்டும் உன்னைத் துன்புறுத்தாது. அதற்குக் காரணமான தீய சக்திகள் வீட்டை விட்டு விலகி ஓடிவிட்டன. உனக்கு மறுபடி வயிற்றுவலி வருமோ என்ற அச்சம் தோன்றும் போது எல்லாம் பிறவிப்பிணி உள்பட எல்லாப் பிணிகளையும் போக்கக் கூடிய நமசிவாய மந்திரத்தை ஜெபிப்பாயாக. என்றாலும் உன் வேண்டுகோளுக்கு நான் உடன்படுகிறேன். உன் வீட்டிலேயே தங்குகிறேன்!’’ என்றார் சுவாமிகள்.
தினமும் இந்த வீட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் சுவாமிகளைத் தேடி வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை பிரச்சினை. சுவாமிகளின் அருளுரையைக் கேட்டும், அவர் நிகழ்த்தும் அற்புதங்களைக் கண்டும் அவர்கள் மெய் சிலிர்த்தார்கள். எல்லாரிடமும் ஆசைகளைக் குறைத்துக் கொண்டு நேர்மையான வழியில் வாழுமாறு வலியுறுத்தினார் சுவாமிகள்.
ஒருநாள் முத்துக்குமார சாமிப் பிள்ளையை அழைத்தார் சுவாமிகள். “வரும் வெள்ளிக்கிழமை எனக்குக் கல்யாணம் நடக்கப் போகிறது. நம் அன்பர்கள் எல்லாரையும் முத்தியால்பேட்டையில் உள்ள சிங்காரத் தோட்டத் திற்கு வரச் சொல்லி விடுங்கள்!’’ என்று உத்தரவிட்டார். அந்த நாளும் வந்தது. எல்லாருமே ஆராதனைக்குரிய மங்கலப் பொருட்கள் வந்து குவிந்திருந்தன. கூட்டம் வெள்ளம்போல் கூடியிருந்தது. விறுவிறு வென்று நடந்து தோட்டத்திற்குள் வந்த சுவாமிகள், தம் அன்பரான சொக்கலிலிங்கம் பிள்ளை என்பவரை அழைத்தார். தாம் பயன்படுத்திய கைக்கடிகாரத்தையும் தம்முடைய பாதுகைகளையும் அவரிடம் கொடுத்தார்.
“”நீ வைத்துக்கொள். எனக்கு கைக்கடிகாரம் தேவைப்படாது. நான் காலத்தைக் கடக்கப் போகிறேன். பாதுகைகளும் தேவைப்படாது. மண்ணில் நடக்கத்தான் பாதுகை தேவை. ஆகாயத்தில் நடக்கப் பாதுகைகள் எதற்கு?’’ அபிஷேக ஆராதனைகளை எந்தெந்த வகையில் செய்யவேண்டும் என்று விரிவாக உணர்த்திய அவர், பத்மாசனத்தில்
அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தார். ஆராதனைகள் தொடங்கின. கற்பூர ஆரத்தி காட்டும்போது சுவாமிகளின் ஆன்மா அவரது உடல் கூட்டிலிருந்து விடுதலை பெற்றிருந்தது. செய்தி கேட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் குழுமத் தொடங்கினார்கள்.
சுவாமிகளின் திருமேனியைச் சமாதிக்கு எடுத்துச் செல்லும் போது சுவாமிகள் மறுபடி உயிர்த் தெழுந்தார். “ஆராதனைகளைச் செய்யும்போது இன்னின்ன செயல்களை அவசரத்தில் செய்யாமல் விட்டுவிட்டீர் கள். அவற்றையும் பொறு மையாகச் செய்து உடலைச் சமாதி செய்வியுங்கள்!’’ என்று அறிவுறுத்திய சுவாமிகள், மீண்டும் தன் உயிரை உகுத்தார் திகைப்படைந்த மக்கள் மறுபடி ஆராதனைகளை முறைப்படி செய்து, அவரது திருமேனியை அவர் சொன்னவாறே முத்துக் குமாரசாமிப் பிள்ளை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள். அங்கே அவரது உடலை மண்ணில் வைத்து மூடி சமாதி எழுப்பினார்கள்.