, ,

குனியமுத்தூரில் சிறுவர் பூங்காவில் மீண்டும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரை எழுத வேண்டும் – அதிமுகவினர் கோரிக்கை

spvelumani
Spread the love

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் பரிந்துரை செய்யப்பட்டு குனியமுத்தூர் பகுதி 93 வது வார்டு மணிகண்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் விளையாட்டு பூங்காவில் முன்னாள் அமைச்சரின் பெயரை திட்டமிட்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மறைக்கப்பட்ட இடத்தில் முன்னாள் அமைச்சரின் பெயரை  மீண்டும்  அதே இடத்தில் எழுத வேண்டும். இல்லையென்றால் தெற்கு மண்டல அலுவலகத்தின் முன்பு குனியமுத்தூர்  பகுதி அதிமுகவின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.