ஜனவரி 26 ஆம் தேதி தில்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க வால்பாறையைச் சோ்ந்த பழங்குடியின தம்பதி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த கல்லாறுகுடி செட்டில்மெண்டில் வசிக்கும் ராஜலட்சுமி என்பவா் ஆனைமலை மலைத்தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்காக பழங்குடி யின மக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து அறவழியில் போராடி நிலஉரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி.தன் கிராமத்தை இந்தியாவின் சிறந்த முன் மாதிரி கிராமமாக மாற்றியுள்ளார். இவரது செயலுக்கு பக்க பலமாக இருந்து செயலாற்றியவர் அவரது கணவர் ஜெயபால். இவர்களது செயலை கெளரவிக்கும் வகையில் இருவரும் தில்லியில் நடைபெற இருக்கும் 75- ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அரசால் தோ்வு செய்யப்பட்டு வருகிற 22- ஆம் தேதி தில்லி செல்ல உள்ளனா்.அங்கு ஜனவரி ஜனாதிபதி தலைமையில் நடக்கும் அணிவகுப்பு மற்றும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்கின்றனர். அதன்பின் ஜனாதிபதி வழங்கும் விருந்திலும் கலந்து கொள்கின்றனர்.
குடியரசு தின விழாவில் பங்கேற்க வால்பாறை பழங்குடியின தம்பதி தோ்வு

Leave a Reply