,

குடியரசு தினத்தை முன்னிட்டு வ.உ.சி மைதானத்தில் சோதனை

voc grounds
Spread the love
நாட்டின் 75வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்படும். மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்வார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அவர்களுக்கு விருதுகளை வழங்குவார். அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும். இதில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொள்வர்.

இந்நிலையில் வ.உ.சி மைதானத்தில் பாதுகாப்புகளை உறுதி செய்யும் வண்ணம் வெடிகுண்டு நிபுணர்கள் நவீன கருவிகளை கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் நிகழ்ச்சிகளை நடப்பதை முன்னிட்டு புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு மைதானம் சமம் செய்யப்பட்டு வருகிறது.