காரியாபட்டி – ஜூலை.1
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், லையன்ஸ் கிளப் துவக்க விழா நடைப்பெற்றது. லயன்ஸ் கவர்னர் பிரான்சிஸ் ரவி தலைமை வகித்தார். முன்னாள் கவர்னர் முகமது அலி முன்னிலை வைத்தார். மண்டலத் தலைவர் ஆடிட்டர் கிருபாகரன் வரவேற்று பேசினார். காரியாபட்டி லையன்ஸ் கிளப் பிற்கு தேர்ந் தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப் பட்டது. புதிய நிர்வாகிகளாக, கிளப் அட்மின் விவேகானந்தன், தலைவராக அழகர்சாமி, செயலாளராக விக்டர் ஆரோக்கியராஜ். பொருளாள ராக, ராமசாமி ஆகியோர் தேர்ந் தெடுக்கப் பட்டனர். விழாவில், அருப்புக் கோட்டை லைன்ஸ் கிளப் தலைவர் டாக்டர். ராஜாராம், செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் ஓம்ராஜ், நிர்வாகிகள் குருசாமி, முத்து வேல், வீரராஜன். ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடுதல், உண்டு உறைவிடப் பள்ளிக்குழந்தை களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கள் நடைபெற்றது.
Leave a Reply