நேர்ச்சி அறக்கட்டளை, கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பகுதியில், SRSI 98ஆம் ஆண்டு மாணவர்கள் மூலம் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை, பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கிறவர்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் இயற்கை பேரழிவுகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக ஒரு உதவிக் கை நீட்டும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
கடந்த 9 ஆண்டுகளாக, பல்வேறு சமூகப்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. முக்கியமாக கீழ்க்கண்ட துறைகளில் தொடர்ந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
நேர்ச்சி கிரீன்: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மரநடுதல் மற்றும் இயற்கை சார்ந்த பணிகள்
விளையாட்டு வளர்ச்சி: இளைஞர்களை ஊக்குவிக்கும் விளையாட்டு நிகழ்வுகள்
விருதுகள் மற்றும் கல்வியுத்தவங்கள்: திறமையான மாணவர்களுக்கு விருது மற்றும் உதவித்தொகைகள் வழங்கல்
இந்த அறக்கட்டளை முழுமையாக சமூக நலத்துக்காகவே செயல்பட்டு, பலரது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
இன்று, நேர்ச்சி பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக, அவிநாசி கருவலூரில் உள்ள ஸ்ரீ சங்கர சேவாலயம் அறக்கட்டளையில் 50 பழ மரக்கன்றுகள் நடப்பட்டது
புகழ்பெற்ற தமிழ் நடிகரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிப்பட்ட பங்களிப்பு வழங்கிய பத்ம ஸ்ரீ விவேக்கின் 4வது நினைவு நாளான ஏப்ரல் 17-ஐ நினைவுகூரும் வகையில், அவருக்கு அன்பான அஞ்சலி செலுத்தும் மனப்பான்மையோடு இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நாளை மேலும் அர்த்தமுள்ளதாக்க, சேவாலயத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கான சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
“இன்று ஒரு மரக்கன்று, நாளை ஒரு காடு.” நாம் ஒன்றாக செயல்பட்டால், பசுமையான, பரிவான ஒரு எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்.
இந்த மரம் நடும் விழாவில் தென்னை நாற்று கொய்யா மா சீதா சப்போட்டா எலுமிச்சை அத்தி மற்றும் முள் சீத்தா உள்ளிட்ட பழவகை நாற்றுக்கள் நடப்பட்டன.
Leave a Reply