உடல் நலக்குறைவால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி
![]()
உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்
இந்நிலையில் இன்றைய காலை இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த செய்தி காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply