கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கோவை வரதராஜபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள சாய் விவாகா மகால் திருமண மண்டபத்தில், தளபதி இரத்ததான இயக்கத்தின் சார்பில், கோவை அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கும் முகாமை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கி ரத்த தானம் வழங்கியவர்களுக்கு,சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், 500 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள். திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மணியரசன் (56) உடல் தானம் செய்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியம், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.மணிகண்டன், நோயல் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து,சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி,கழக தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை,மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர்.கோகுல், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply