தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “40க்கு 40 என்ற வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்தோடு இந்த வெற்றியை தமிழக மக்கள் தந்துள்ளார்கள். யாருமே எங்களுக்கு எதிரி இல்லை என்ற பிம்பத்தை பாஜகவினர் ஏற்படுத்தினார்கள்.
ஆனால், இப்போது ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களைக் கூட பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதல் தொடுத்தனர். பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகத்தை உடைத்தெறிந்து பெற்றிருக்கும் இந்த வெற்றி, வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக உள்ளது.
கலைஞர் கருணாநிதிக்கு இந்த வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன். தாமரை மலரும் என்றார்கள். ஆனால், மலராமல் போனது. மோடியின் எதிர்ப்பு அலை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. தமிழகத்தில் முழுமையாக மோடி எதிர்ப்பு அலை இருப்பதற்கு இது எடுத்துக்காட்டு. திருக்குறளை பாராட்டுவதெல்லாம் மக்களை ஏமாற்றப் பேசியவை. ஒடிசாவில் சென்று அவர் என்ன பேசினார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். நாளை இந்தியா கூட்டணிக்கட்சியின் தலைவர்கள் டெல்லியில் கூடுவார்கள், நானும் அங்கு செல்கிறேன்.” என்றார்.
பெரும்பான்மை ஏற்பட்டால் பிரதமர் வேட்பாளராக உங்களை நிறுத்துவார்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “என் உயரம் எனக்குத் தெரியும். தேர்தல் முடிவுகள் முழுமையாக வரவில்லை. வெளிவந்த பிறகு அந்த கருத்து குறித்து பேசலாம்.” என்று பதிலளித்தார்.
Leave a Reply