, , ,

கலங்கல் ஊரட்சியை நகரட்சியக மாற்ற எதிர்ப்பு ; ஆட்சியரிடம் மனு

kalangal manu
Spread the love

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கலங்கள் ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்களோடு இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளித்தார் ஹிந்துஸ்தான் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன். கலங்கல் ஊராட்சியில் 9000 முதல் 10,000 மக்கள் வசித்து வருகிறார்கள். கலங்கல் ஊராட்சியில் 650 குடும்பங்கள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி செய்து தன் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகிறார்கள். தினசரி இவர்களுக்கு 300 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. கலங்கல் ஊராட்சியில் வீட்டு வரி சதுர அடிக்கு ஒரு ரூபாய் 10 பைசாவே வசூலிக்கப்படுகிறது. கலங்கல் ஊராட்சியில் தற்போது ஒன்பது வார்டுகள் உள்ளது. இப்பகுதியில் தற்போது முடிந்தளவு மக்களுக்கு உண்டான பணிகள் சிறப்பாகவே நடந்து வருகிறது. மத்திய அரசின் நிதி குழு மானியம் மூலமாக வருடம் தோறும் பல லட்சங்கள் நிதியாக ஊராட்சிக்கு கிடைக்கிறது. இதன் மூலமாக ஊராட்சியில் மக்களுக்கான பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. அதேபோல நகராட்சியாக மாற்றம் செய்கின்ற போது 650 குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். மத்திய அரசில் இருந்து வருடம் தோறும் தரப்படுகின்ற நிதியும் இந்த ஊராட்சிக்கு கிடைக்காது, கலங்கல் ஊராட்சி நகராட்சியாக மாற்றப்படுகிற போது ஆறு மாதத்துக்கு ஒரு முறை வரி கட்ட வேண்டும், அதுவும் பல மடங்கு வரி அதிகரிக்கப்படும். தற்போது சூலூர் பேரூராட்சியானது நகராட்சியாக மாற்றப்படுகிற போது மூன்று கிலோமீட்டருக்கு தள்ளி உள்ள கலங்கல் ஊராட்சியை இணைப்பதால், முப்பதாயிரம் பேர் வசிக்கக்கூடிய சூலூர் பகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களும் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கலங்கல் ஊராட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் நிறைய பேர் வசித்து வருகிறார்கள். ஆகவே இதை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊர் பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கலங்கல் ஊராட்சியை நகராட்சியாக மாற்றம் செய்யக்கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளிதுள்ளார் .