கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம், தவெக சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதற்கிடையே, சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், தவெக தலைவர் விஜய் கரூர் மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டிய கட்டாயத்துடன், வீடியோ கால் மூலம் மட்டுமே தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்து, அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
“தன் மீது குற்றம் இல்லையெனில், விஜய் தைரியமாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருந்திருப்பார். ஆனால் தன் தோழர்கள் மற்றும் தனது நெஞ்சின் குற்ற உணர்வின் காரணத்தால் வெளியே வர பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் வீடியோ காலில் மட்டுமே பேசுகிறார்” என அவர் விமர்சனம் செய்தார்.



Leave a Reply