கரும்பில் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆரின் உருவத்தை செதுக்கிய யு.எம்.டி ராஜா

mgr
Spread the love

முன்னாள் முதலமைச்சர்.எம் ஜி ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு கரும்பில் அவருடைய திரு உருவத்தை கோவை குனியமுத்தூரை சேர்ந்த யு.எம்.டி ராஜா செதுக்கி வடிவமைத்துள்ளார். மக்கள் மத்தியில் என்றும் அவர் இனிமையானவர் என்பதால் அவரை இனிக்கும் கரும்பில் வடிவமைத்துள்ளதாகவும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பண்டிகை பொங்கல் பண்டிகை, கரும்பை மிகவும் விரும்பி சாப்பிட கூடியவர் அதனால் அவர் பிறந்த நாளில் அவரது புகழை கொண்டாடும் விதமாக இந்த இனிய ஓவியத்தை படைத்துள்ளதாகவும் யு.எம்.டி. ராஜா கூறினார்.