மாநிலங்களவை உறுப்பினராகிய பின் தமிழகம் வந்த எல்.முருகன் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மேல தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, எல்.முருகன் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளதாகவும் பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் பரிந்துரையின் பேரில் அவர் மீண்டும் மாநிலங்களைவை உறுப்பினராகியுள்ளார் என்றும் குறிப்பிட்டார். இவருக்கு வழங்கிய பதவி தமிழகத்தில் மேலும் பாஜகவை பலப்படுத்தும் எனவும் தொடர்ந்து எல்.முருகன் நீலகிரியில் கட்சியின் கட்டளைக்கு ஏற்றவாறு கட்சி பணியாற்றுவார் என்றும் நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்த அவர், கட்சி என்ன கட்டளையிட்டாலும் முருகன் பணியாற்றுவார் எனவும் கூறினார்.
Leave a Reply