ஓணம் பண்டிகை கொண்டாடும் விதமாக கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான மலையாள மக்கள் குடும்பத்தாருடன் வந்து சாமி தரிசனம் செய்து ஓணம் பண்டிகை கொண்டாடினர். மலையாள மக்களின் பாரம்பரிய உடையில் கோவிலுக்கு வருகை தந்தனர். மேலும் கோவில் வளாகத்தில் கொடிக் கம்பத்தின் கீழே அத்தப் பூ கோலம் போடப்பட்டு அதனை பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதுமட்டுமில்லாமல் மலையாள மக்கள் தங்கள் வீடுகளிலும் அத்தப் பூ கோலமிட்டும் சாமி தரிசனம் செய்து பின்னர் கோவையில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
ஓணம் பண்டிகையையொட்டி சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த மலையாள மக்கள்

Leave a Reply