தேர்தல் சமயம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் பல்வேறு இடங்களில் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதனை தடுப்பதற்கும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யு.எம்.டி ராஜா என்ற கலைஞர் ஓட்டுக்கு பணம் வாங்காதீர் என்பதை வலியுறுத்தும் விதமாக தூண்டில் போட்டு மீன் பிடிப்பதை உதாரணமாய் எடுத்து பூதக்கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் விழிப்புணர்வு ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். அந்த ஓவியத்தில் தூண்டில் முனையில் பணத்தின் குறியீட்டையும் அதனை நோக்கி மனிதர் வருவது போன்றும் ஓவியத்தை வரைந்துள்ளார்.
Leave a Reply