, ,

ஒரு மில்லியன் விதை பந்துகள் தயாரித்து கோவை கல்லூரி மாணவிகள் சாதனை

nirmala college
Spread the love

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி மற்றும் கோவை தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஒரு பூமி – ஒரு குடும்பம் – ஒரு எதிர்காலம் – என்ற முழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரு மில்லியன் விதை பந்துகளை பெருமளவில் தயாரித்து கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவிகள் கூறும்போது, “பூமியில் வாழ்வின் அடித்தளமாக இயற்கை அன்னை முக்கிய பங்கு வகிக்கிறது. இது அத்தியாவசிய வளங்களை வழங்குகிறது.

ஒரு ஆரோக்கியமான கிரகத்தை பராமரிப்பதற்கும் தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினரின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் இயற்கையை மதிப்பு பாதுகாப்பிற்கும் இத்தகைய நிகழ்வு கல்லூரி மாணவர்கள் மத்தியில் முக்கியமானது” என்று தெரிவித்தனர். நிர்மலா கல்லூரி முதல்வர் டாக்டர் மேரி பேபியோலா பேசுகையில், “பெண்களுக்காக, இயற்கை அன்னையைக் காப்பாற்றவும், வருங்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காகவும் 1 மில்லியன் விதைப்பந்துகளை பெருமளவில் உற்பத்தி செய்வதற்கு மாணவிகள் கைகோர்த்துள்ளனர்” என்று தெரிவித்தார்.