ஒரு ஆசிரியருடன் இயங்கும் பள்ளி; மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார்

Spread the love

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு குமரன் நகரில் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக ஆசிரியர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வந்த நிலையில், இந்த ஆண்டு 49 மாணவ மாணவிகள் மட்டுமே உள்ளனர். தற்போது ஒரே ஒரு ஆசிரியை மட்டும் உள்ளதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

பழமை வாய்ந்த இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வந்தனர். தற்போது ஆண்டுக்கு ஆண்டு ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைந்ததன் விளைவாக தற்போது மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து 49 மாணவர்கள் மட்டுமே பள்ளியில் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு ஏக்கர் பரப்பளவில் மைதானம், நல்ல வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற அனைத்து வசதிகள் இருந்தும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான பெற்றோர்கள் வேறு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்து விடுகின்றனர். ஒரு ஆசிரியை மட்டும் ஐந்து வகுப்புகளுக்கும் பாடம் எடுக்கும் போது மாணவ மாணவிகளின் கல்வி திறன் பாதிக்கும் எனவே தமிழக அரசு உடனடியாக கூடுதல் ஆசிரியர்களை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *