ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் ஐநா காலநிலை மாநாடு தொடங்கியது. கரிம உமிழ்வை தடுத்தல், தகவமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை முறையாக மேற்கொண்ட பிறகும் கூட, இயற்கை இடர்களால் நேரும் தவிர்க்க இயலாத இழப்புகளை எதிர்கொள்ளும் வகையில், ‘இழப்பு மற்றும் சேத நிதியம்’ (Loss and Damage Facility) தொடங்கப்பட்டது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். இக்கூட்டத்தில், 140 நாடுகளின் பிரதமர்கள் உட்பட சுமார் 80,000 பிரதிநிதிகள் பங்கேற்றார்கள்.
மருத்துவர் ராமதாஸை நிறுவனராகக் கொண்ட பசுமைத் தாயகம் சார்பில், எம்.பி. மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் மாநில செயலாளர் இர.அருள், மாநில துணைச் செயலாளர் ஐ.நா.கண்ணன்,செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் பம்மல் ராகுல், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் மேடவாக்கம் ப.இரவிக்குமார் பங்கேற்றனர்.
Leave a Reply