ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் எஸ்.பி.வேலுமணியும், முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தது கவனத்தை ஈர்த்தது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா மற்றும் 24-வது பேரூர் ஆதீனம் சாந்திலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா கோவையில் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி பேரூர் ஆதீன மடத்தில் பாரம்பரிய சிவ வேள்வி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றுள்ளார். மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவரும், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
நேற்று நடைபெற்ற முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா உள்ளிட்டவர்களை விமர்சித்து வீடியோ ஒளிபரப்பப்பட்ட போது, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இருந்தது பேசுபொருளான நிலையில், இன்று எஸ்.பி.வேலுமணியும் அண்ணாமலையும் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
Leave a Reply