சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் இளையோர் திருவிழாவின் 38-வது பதிப்பை “எஸ்ஆர்எம் சிகரம்” என்ற பெயரில் தனது வளாகத்தில் நடத்தியது.
ஐந்து நாட்கள் நிகழ்வாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்ற இத்திருவிழாவை எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் நிறுவனர் – வேந்தர் டாக்டர். டி.ஆர். பாரிவேந்தர் தொடங்கி வைத்தார். துணை வேந்தரும், ஏ.ஐ.யு வின் கூடுதல் செயலருமான மம்தா அகர்வால், மற்றும் இயக்குனர் (மாணவர் விவகாரங்கள்) டாக்டர். நிஷா அசோகன் கலந்து கொண்டனர். நிறைவு விழா நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக ஆர். கிளெமெட் ரமேஷ் குமார் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த 21-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களிலிருந்து இந்நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்றனர். சிகரம் இளையோர் திருவிழாவில் ஒட்டுமொத்த அளவில் முதன்மை வெற்றியாளராக கேரளா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டது.
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சிகரம் இளையோர் திருவிழா

Leave a Reply