கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் வைஷ்ணவ் கல்லூரி முதல்வர். முனைவர்.அர்ச்னா பிரசாத் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கல்லூரி முதல்வர் முனைவர். கி சித்ரா இந்த ஒப்பந்தமானது கல்விப் பரிமாற்றங்கள், கூட்டு முயற்சிகள் ஆராய்ச்சி, போன்ற செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றார். எஸ்என்ஆர் சன்ஸ் நிர்வாகத்தின் இயக்குநர் முனைவர்.என்.ஆர்.அலமேலு இந்த முயற்சி சிறக்க வாழ்த்தினார்.
எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரியுடன் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Leave a Reply