ஊட்டி , வால்பாறையை மேம்படுத்த புதிய திட்டம்

Epass ooty kodaikanal
Spread the love

திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற நகரங்கள், அதை ஒட்டிய சிறு நகரங்களுக்கு, முழுமை திட்டம் எனப்படும், ‘மாஸ்டர் பிளான்’ தயாரிக்கும் பணிகள், பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன.நகர்ப்புற திட்டமிடல் சார்ந்த கல்வி நிறுவனங்கள் பங்கேற்புடன், புதிய முழுமை திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

முழுமை திட்டம் என்பது ஒரு நகரத்தில், அடுத்த, 20 ஆண்டுகளில் ஏற்படும் வளர்ச்சி கருதி, அதற்கு ஏற்ற வகையில் அடிப்படை வசதி மேம்பாட்டை திட்டமிடுவதாகும்.

எனவே, ஊட்டி, கொடைக்கானல். வால்பாறை உள்ளிட்ட 7 நகரங்களுக்கு ‘மாஸ்டர் பிளான்’ பணிகளை துவக்கியது டி.டி.சி.பி. இதனால் ஏற்படும் முறையற்ற நகர்ப்புற வளர்ச்சியை கட்டுப்படுத்த, புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வீட்டு வசதி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற நகரங்களில், கட்டட விதிமீறல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. சீசன் காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை கருத்தில் வைத்து, ஊட்டி, கூடலுார், நெல்லியாளம், கோத்தகிரி, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு ஆகிய நகரங்களுக்கு, புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்கும் பணிகளை, டி.டி.சி.பி. தொடங்கியுள்ளது என்றார்.