ஊட்டியில் 20-வது ரோஜா மலர் கண்காட்சி

dolphin
Spread the love

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படு​கின்றன.​ அந்தவகையில், இந்த ஆண்டுக்கான கோடைவிழா மே 3ஆம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, கூடலூரில் வாசனைத் திரவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது.​ இந்நிலையில், ஊட்டி ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா மலர் கண்காட்சி தொடங்​கியது. இக் கண்காட்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவின் ​சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, அரசு கொறடா ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.​ ரோஜா பூங்கா முழுவதும் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விருந்தினர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கண்காட்சி பார்வை விருந்தாக அமைந்தது. பூங்கா நுழைவாயிலில் தோரணங்கள் அமைக்கப்பட்டு, பலவிதமான ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணமயமான ரோஜா மலர்களால் டால்பின் வடிவ அலங்காரம் உருவாக்கப்ப ட்டுள்ளதுடன், சிப்பி, நத்தை, மீன், பென்குயின் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் மலர்களால் உருவாக்கப்பட்டு கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.​