கோவையில் இருந்து ஊட்டிக்கு 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர் அதை அடுத்து
நீலகிரி மாவட்டத்தில் வரும் 10ம் தேதி கோடை சீசன் தொடங்குவதை முன்னிட்டு கோவையில் இருந்து 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். . கோவையில் இருந்து ஊட்டி மற்றும் கூடலூர் வரை அரசு பேருந்துகளின் புறப்பாடு 80 ஆக உள்ளன என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகிறார்கள்
தற்போது ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க இருப்பதால் , சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை தொடர்ந்து . பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவையில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது .
எனவே சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, அரசு பேருந்துகளில் பயணித்து கோடை விழாவை காண நீலகிரிக்கு செல்லலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Leave a Reply