உலக காசநோய் தினம் – 2025 ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி

Spread the love

ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் மருத்துவ அறுவை சிகிச்சை செவிலியர்
துறை மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து மார்ச் 24, 2025 அன்று ஸ்ரீ
ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு "காச நோயை
முடிவுக்கு கொண்டு வர முடியும்" என்ற கருத்தினை மையமாகக் கொண்டு கண்காட்சி
ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கண்காட்சியின் நோக்கமானது காசநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம்
எடுத்துச் செல்வதாகவும். அதனால் மாணவர்கள் பல்வேறு செயல்பாடுகள் மூலம்
குறிப்பாக வரைபடம் மற்றும் செயல் விளக்கம் ஆகியவற்றை கொண்டு காச நோயின்
அறிகுறிகள், சிகிச்சை முறைகள், நோய் அறிதல், மற்றும் தடுப்பு முறைகள் போன்ற
பல்வேறு தலைப்பில் மக்களிடம் காச நோயை பற்றி எடுத்துரைத்தனர்.
இதனால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் குடும்பத்தினர் பல தகவல்களை அறிந்து
கொண்டனர்.இந்நாளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி காசநோய் முடிவுக்கு
கொண்டு வர முடியும் என்ற நோக்கத்தோடு கண்காட்சி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *