கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சேக்முகமது (34). இவர் கோவை சட்டக்கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வரும் இவர் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள ஆனந்தாஸ் உணவகத்தில், பிரைடு ரைஸ் உணவு வாங்கியுள்ளார்.
அதன் விலை ரூ.160 என்றும் பார்சல் செய்து கொடுத்த கண்டைனருக்கு ரூ.5.71 என்றும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்துள்ளனர். ஆனால் கண்டைனரில் அந்த உணவகத்தின் பெயர் மற்றூம் லோகோ இடம் பெற்றிருந்ததையடுத்து உணவு பார்சல் கொடுத்த கண்டைனருக்கு கட்டணம் வசூல் செய்தது தவறு என்றும் அதில் உள்ள அவர்களது நிறுவன லோகோ மூலம் தன்னை விளம்பர ஏஜென்டாக பயன்படுத்தியதாகவும் சேக்முகமது அந்த தனியார் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.
அந்நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்காததால் சேக்முகமது கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். கடந்த ஓராண்டாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ஆனந்தாஸ் உணவகம், வாடிக்கையாளர்களுக்கு உணவு பார்சல் கொடுக்கும் கண்டைனரில் உணவகத்தின் லோகோ வை பயன்படுத்த கூடாது என நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் சேக் முகமதுக்கு இழப்பீடாக ரூ,10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவீனம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply