சிறுமுகை வனச்சரகம், கூத்தாமண்டி பகுதியில் வன எல்லையை ஒட்டி யானை ஒன்று நின்று கொண்டிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல் அடிப்படையில் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின் படி மருத்துவக் குழுவினர் முதல் சிகிச்சையாக யானைக்கு தர்பூசணி மற்றும் வாழைப்பழம் மூலமாக ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், குடற்புழு மாத்திரைகள் மற்றும் கல்லீரல் புத்துணர்வு வைட்டமின் டானிக் ஆகியவை கொடுக்கப்பட்டு யானை அவற்றை முழுவதுமாக உட்கொண்டது. மேலும் வனப்பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரால் யானை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
உடல் நலக்குறைவான காட்டு யானைக்கு சிகிச்சை

Leave a Reply