கோவை, தடாகம், மாங்கரை, ஆனைகட்டி, மருதமலை, உள்ளிட்ட பகுதிகளில் காட்டு விலங்குகள் அதிகம் உள்ளன. குறிப்பாக ஆனைகட்டி, மாங்கரை அதனை ஒட்டி உள்ள தடாகம், சோமையனூர், திருவள்ளுவர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டமும் அவ்வப்போது தென்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பு திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் சிறுத்தை இருந்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரலானது.
இந்நிலையில் இன்று சின்ன தடாகம் – வீரபாண்டி புதூர் செல்லும் வழியில் சரவணன் என்பவரின் வீட்டிற்கு அருகில் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடும் காட்சிகள் அங்கு உள்ள சி.சி.டி.வி யில் பதிவாகி உள்ளது. எனவே வீரபாண்டி புதூர் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து கோவை சரக வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வனத் துறையினர் கருஞ்சிறுத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது அந்த சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.
Leave a Reply