, , ,

இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ! – ராமநாதபுரம் நாட்டுப் படகு மீனவர்கள் அறிவிப்பு….

tamilnadu fishermens
Spread the love

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 24 பேரையும், 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்தது.எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவத்துடன் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருவதை கண்டித்து,இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் , வரும் 5ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தல் ஈடுபடவுள்ளனர்.