அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு 21ந்தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூமாகளுக்கான மாநிலக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 சதவீத இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு, மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில அளவிலான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. எனினும் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவகள் முதலில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். இந்த விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அதனப்டி விண்ணப்ப பதிவு முடிவடைந்தது. இந்த கலந்தாய்வில், சிறப்பு இட ஒதுக்கீடு, 7.5% இட ஒதுக்கீடு தொடர்பான விவரம் அரசுப் பள்ளி மாணவர்கள், விளையாட்டு மாணவர்கள். மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு, ஆக.22 மற்றும் 23ஆம் தேதி நடைபெறும் இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் சேர்க்கை எதுவும் இல்லை. 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. அக். 1 முதல் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று தொடங்குகிறது அகில இந்திய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு …

Leave a Reply