இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான பதற்ற சூழ்நிலைக்கிடையே, இந்திய ராணுவத்திற்கு தன்னார்வமாகச் சேவை செய்யும் நோக்கில் பஞ்சாபின் சண்டிகரில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் குவிந்து பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.
ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த இந்தியா, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரிக்க, மே 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் இருவரும் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் வழித் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
இந்த தாக் குதல்களுக்குப் பதிலளிக்க இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு, பாகிஸ்தானின் ட்ரோன்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தி அனைத்தையும் அழித்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “18 வயதுக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் மே 10ஆம் தேதி காலை 10 மணிக்கு தாகூர் தியேட்டருக்கு வரவும்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை காலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் நிகழ்விடம் வருகை தந்து, “பாகிஸ்தான் அழிய வேண்டும்! இந்திய ராணுவத்துக்கு உதவத் தயாராக இருக்கிறோம்!” என கோஷமிட்டனர். இந்த தன்னார்வலர்களுக்கான சிவில் பாதுகாப்பு பயிற்சி நிகழ்ச்சி சனிககிழமை இரவு 10.30 மணிக்கு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்திற்கு உதவ சண்டிகரில் குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

Leave a Reply