இந்திய தொழில் வர்த்தக சபை, தி அட்வர்டைசிங் கிளப் மற்றும் பி.எஸ்.ஜி குழுமங்கள் சார்பில் ஆறாவது முறையாக ‘பிராண்ட் கோயமுத்தூர் அம்பாசடர் விருது’ வழங்கும் விழா, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ராஜேஷ் லுந்த் தலைமை வகித்தார். கோவை, தி அட்வர்டைசிங் கிளப் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
‘லெகசி பிராண்ட்’ பிரிவில், பிரீமியர் குழுமம் நிறுவனர் ஜெகதீஷ் சந்திரன், ஐகானிக் பிராண்ட் விருது(கோவை) கிராப்ட்ஸ்மேன் ஆட்டோ மேஷன் நிறுவனத்தின் இயக்குநர் கவுதம் ராம், ஐகானிக் பிராண்ட் விருது (கோவை மண்டலம்) ராம்ராஜ் காட்டன் நிறுவ னர் கே.ஆர்.நாகராஜன், பிராண்ட் அம்பாசிடர் விருது கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிச்சாமி, எமர்ஜிங் பிராண்ட் விருது பிராமினன்ஸ் விண்டோஸ் சிஸ்டமஸ் நிறுவனத்தின் டி.நந்தகுமார் ஆகியோ ருக்கு வழங்கப்பட்டது.
டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.தினேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் சாதனை படைத்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஆறாவது முறையாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
தொழிலில் துணிச்சலுடன் ஆபத்தை எதிர்கொண் டது, தடைகளை தகர்த்தது போன்ற சாதனைகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று உலகளவில் இந்திய தொழில்முனை வோர்பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். பிராண்ட் கோயமுத்தூர் விருது என்பது நிறுவனங்களுக்கு உட்பட்டது மட்டுமல்ல. நிறுவன முன்னேற்றத்துடன், சமுதாய வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.” என்றார்.
இவ்விழாவில் தொழி லதிபர்கள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எம்.கிருஷ்ணன், கிருஷ்ணராஜ் வானவராயர், கே.ஜி.பாலகிருஷ்ணன், லக்ஷகா டெக்ஸ்டைல்ஸ் உரிமை யாளர் எம்.பத்மநாபன், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Leave a Reply