இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஏற்பட்டிருந்த மோதல் நிலை இன்று மாலை 5 மணி முதல் முடிவுக்கு வரவுள்ளது. இருநாட்டுகளும் அனைத்து வகையான தாக்குதல்களையும் நிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன என இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
சமீப நாட்களில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருதரப்பும் ஒருவரின் மீது ஒருவர் குண்டு மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதன் காரணமாக பதற்றம் அதிகரித்து வந்தது. பல்வேறு உயிரிழப்புகளும், சேதங்களும் இந்த மோதல்களால் ஏற்பட்டன.
இந்த நிலைமையை சமாளிக்க, அமெரிக்கா தலையீடு செய்ததாகவும், அதன் பரிந்துரையின் பேரில் இருநாடுகளும் தற்காலிகமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணியிலிருந்து, எல்லை பகுதிகளில் எந்தவிதமான தாக்குதலும் நடைபெறாது எனவும், இருநாடுகளும் அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கத் தலைவர் டொனால்டு டிரம்ப் முன்வைத்த சமாதான முயற்சி இப்போர்நிறுத்தத்தில் முக்கிய பாத்திரம் வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பால் எல்லை ஊர்களிலும் நிம்மதி நிலவத் தொடங்கியுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Leave a Reply