கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய செயலாளர் ஷரிதா லைட்ப்லாங், செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது பேசிய அவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பான விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டுள்ளது, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் உடனடியாக அது அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரை ஏற்று 2014ம் ஆண்டு பதவி ஏற்ற பிரதமர் குறைந்தபட்ச ஆதார விலை செயல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளித்து இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும், பாரத் ரத்னா வழங்கி கௌரவிக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை செயல்படுத்துவதே அவருக்கு செலுத்தும் நன்றி கடன் என தெரிவித்தார்.
குறைந்தபட்ச ஆதார விலை 50% அளிக்கப்படும் என அறிவித்து ஆட்சிக்கு வந்த பாஜக உச்ச நீதிமன்றத்தில் இதனை செயல்படுத்த முடியாது எனக் கூறியுள்ளது, நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்திய போது, இது குறித்து பரிசீலனை செய்யப்படும் கூறியிருந்ததாகவும் ஆனால், இது நடைமுறைப்படுத்தப் படவில்லை எனவும் மத்திய அரசிற்கு இதனை நினைவூட்டும் வகையில் தலைநகரை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்று அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாஜக ஆளும் ஹரியானாவில் காவலர்கள் விவசாயிகளை தடுத்து நிறுத்தி கண்ணீர் புகை குண்டுகளைக் கொண்டு விரட்டி அடிக்கப்பட்ட சம்பவத்தை இந்த நாடு அறியும் என தெரிவித்தார். அமைதி பேரணியாக சென்ற விவசாயிகளை பாஜக அரசு மற்றும் ஹரியானா அரசு அமைதிப் பேரணி நடத்திய விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வழங்குவதை நிறுத்தியது பொதுமக்களிடையே விவசாயிகள் மீது அவப்பெயரை ஏற்படும் வகையில் அமைந்தது என தெரிவித்தார். 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைவதற்கு முன்பு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு பல்வேறு உறுதி மொழிகளை அளித்திருந்தார் எனக்கு கூறிய அவர் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் அனைத்தும் கொண்டுவரப்படும் எனக் கூறியிருந்த அவர் காங்கிரஸ் கட்சியின் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்த அவர், அனைவரது வங்கிகளிலும் 15 லட்சம் பணம் வரவு வைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அளித்தார்.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்ற தவறான நடவடிக்கைகளால் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வரலாறு காணாத அளவில், டீசல் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாகவும் சர்வதேச சந்தைகளில் க்ரூடாயில் விலை குறைந்துள்ள நிலையிலும் தற்போது பெட்ரோல் டீசல் அதிகரித்துள்ளதாகவும் ஆனால் அதனை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் 10 ஆண்டு காலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக மக்களுக்கு அநீதிகளை மட்டுமே செய்துள்ளதா குற்றம் சாட்டினார். பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்த பாஜக அரசு பொதுமக்களுக்கு என்ன செய்தது என காங்கிரஸ் கேள்வி எழுப்புவதாகவும் காங்கிரஸ் ஆட்சியின் பொழுது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து இருந்ததாகவும் கூறினார்.
மணிப்பூர் கலவரங்கள் மோடி நடைபெற்றதிலிருந்து இதுவரை அங்கு செல்லாத பிரதமர் மோடி, அங்கு செல்வதை முக்கியமாக கருதவில்லை எனவும் தேர்தல் நடைபெறும் பொழுது வாக்குகள் பெறுவதற்காக மட்டுமே அங்கு செல்வார் எனவும் தெரிவித்தார். தொகுதி பங்கீடு குறித்தான கேள்விக்கு காங்கிரஸ் உயர்மட்ட குழு இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அது குறித்து நான் பதில் அளிக்க முடியாது எனவும் தெரிவித்தார். மேலும் இந்தியா கூட்டணி குறித்து தவறான தகவல்கள் பகிரப்பட்ட வருவதாகவும் காங்கிரஸ் உயர்மட்ட குழு கூடி அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து செல்லும் என்றார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடும் எனத் தெரிவித்தார்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படு வதாகவும், இது நாட்டின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும் எனவும் இதில் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வேலையின்மை அடைவார்கள் என தெரிவித்தார். பாஜக அரசு CBI, ED போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி நாட்டில் உள்ள பல்வேறு எதிர் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அச்சுறுத்தல் அளித்து வருவதாக குற்றம் சாட்டினார். ராமர் கோயில் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், அது மனதில் தான் இருக்க வேண்டும் எனவும் அது குறித்து விளம்பரம் கூடாது என பதில் அளித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் இறுதியாக காங்கிரஸ் தலைமை கூட்டணி குறித்து அறிவிக்கும் என்று கூறினார்.மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பலம் உள்ளது அதற்கு ஏற்றவாறு திமுக சீட் கொடுப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணி உள்ளது அதற்கு ஏற்றவாறு கட்சி செயல்படும்.பாஜகவை எதிர்ப்பதற்காக வலுவான கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்தார். மேலும் விடுதலை போராட்டம் காலத்தில் பாஜக பங்கேற்கவில்லை.தற்பொழுது காங்கிரஸ் வெற்றி பெற்று கொடுத்த சுதந்திரத்தை பாஜக வீணாக்கி உள்ளது.
பாராளுமன்றத்தில் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சி சாதனை குறித்து பிரதமர் மோடி பேசாமல் 60 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை பேசி மக்களை திசை திருப்புகிறார்.
10 ஆண்டுகள் பாஜக செய்த அநீதியை கிராமந்தோறும் எடுத்துச் சென்று மக்களுக்கு விளக்குவோம் என்றும் பாஜக ஆட்சி பெரிய முதலாளிகளுக்கு மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு கிடையாது என்று விமர்சனம் செய்தார்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை – காங்கிரஸ் தேசிய செயலாளர் ஷரிதா லைட்ப்லாங்

Leave a Reply