தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework – NIRF) இன்று வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் முதல்முறையாக மாநில பல்கலைக்கழங்களின் தரவரிசியை தனியாக அறிவித்துள்ளது. மாநில பல்கலைக்கழங்களின் தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது, 2 ஆவது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும், 3 ஆவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகமும் பிடித்துள்ளது. மத்திய அரசுப் கல்வி நிறுவனங்களில் பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்.சி. (IISc) முதலிடம் பிடித்துள்ளது. 2 ஆவது இடத்தில் JNU பல்கலைக்கழகமும் 3 ஆவது இடத்தில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகமும் பிடித்துள்ளது. ஏற்கனவே 13 பிரிவுகளில் கல்வி நிறுவனங்களை தரவரிசைப் படுத்திவந்த NIRF இந்த ஆண்டு முதல் மாநில அரசு நிதியில் செயல்படும் பல்கலைக்கழகங்கள், திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மற்றும் திறன் பல்கலைக்கழங்கள் ஆகிய மேலும் 3 பிரிவுகளில் தரவரிசை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் நம்பர் 1 பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகத்தை தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு அறிவித்துள்ளது…..

Leave a Reply