சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.
நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பான வழக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அழைத்துப் பேச வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து இன்று மாலை முதலமைச்சர் சக அமைச்சர்களுடன் ஆளுநர் ஆர் என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய கடிதத்தை முதல்வர் ஆளுனரிடம் வழங்கினார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
Leave a Reply