,

ஆலங்குடி குருப்பெயா்ச்சி விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

gurupeyarchi
Spread the love

குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிற ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது   அதனால் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.நிகழாண்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயா்ச்சி அடைகிறாா்.

குருவின் 5,7,9 பார்வை பெறக்கூடிய சில ராசிகள் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். கல்விக்கு அதிபதியான குரு பகவான் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாகவும்  அவர்களுக்கு ஆசிரியராகவும் பணியாற்றியவர்.இதனாலேயே அவரை   பிரஹஸ்பதி என்றும் அழைப்பவர்.

இக்கோவிலில் வீற்றிருக்கும் குருபகவான் விசேஷமானவர்.   குரு பெயர்ச்சி மற்றும் திருவிழாக்காலங்களில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.  .இதையடுத்து பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

இந்த குருப்பெயா்ச்சி விழாவில்  நாடு முழுவதும் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொள்ளுவதால் கூட்ட நெரிசலை தடுக்க,பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி, அதன்படி,  பக்தா்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்ய பந்தல் மற்றும் தடுப்புகள் அமைக்க.திருவாரூா் மாவட்ட ஆட்சியா் சாருஸ்ரீ உத்தரவிட்டு உள்ளார்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவின் பேரில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.குரு பெயர்ச்சியை ஒட்டி, ஏற்கனவே முதல்கட்ட லட்சார்சனை முடிவடைந்த நிலையில், 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை நடைபெறவுள்ளது..இந்த லட்சார்ச்சனையின்போது, ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் உள்ளிட்ட ராசிக்காரா்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.