உத்தரப்பிரதேசம் வாரணாசியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது சாரா நாத். இங்கு தான் கௌதம புத்தர் முதல் போதனையை வழங்கினார்.
அதனால் சாரநாத் புனிதம் நிறைந்த நகர் என பெயர் பெற்றது.இந்நகரத்தில் உள்ள சிங்க தலைகள் பதித்த அசோக சக்கரமே நம் நாட்டின் இலச்சாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிமு 3 நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த அடையாளச் சின்னம், சுதந்திரம் பெற்ற 2 மாதங்களுக்கு முன், அதாவது 1947 ஜூன் -22 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இப்படி நூற்றாண்டுகள் பல கடந்தும் சரித்திரம் சொல்லும் இந்த அடையாள சின்னத்தை, இந்தியாவில் முதல் முறையாக கோவையில் உள்ள புகழ்பெற்ற ஆர் கோல்டு நிறுவனம் அமைத்திருப்பது அனைவருக்கும் பெருமை தரும் நிகழ்வாகும்.
கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலை நயமிகு சிலைகளை நிறுவி வருகின்றனர். கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில், கோவை ஆர்.கோல்டு நிறுவனம் சார்பில் அசோகச் சக்கரம் சிங்கம் தலை கொண்ட கம்பீரமான சிலை திறந்து வைக்கப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் சிலையை திறந்து வைத்தார்.
நாட்டின் ஒற்றுமை, பெருமையை பறைசாற்றும் இந்தச் சிலை திறப்பு விழாவில், நமது பாரம்பரிய கலைகளின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பரதநாட்டியம், கதக்களி, சிறப்பு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித் ததுடன், தேசிய ஒருமைப்
பாட்டின் முக்கியத்துவத் தையும் உணர்த்தியது. இந்தச் சிலை திறப்பு குறித்து, ஆர். கோல்டு நிறுவனர் ஆர்.ரங்கசாமி கூறுகையில், அனைவருக்கும் நம் இந்திய நாட்டின் பெருமையையும்,
அதன் சிறப்பு மிகு சரித்திரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் இச்சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெற்றுள்ளது.
கிமு 3 நூற்றாண்டில்
இச்சிலை வடிவமைக்கப் பட்டது என்ற செய்தி, எல்லோரும் பெருமை கொள்வதாகும்.
இச்சிலையினை உக்கடம் பகுதியில் அமைப்பதற்கு அனுமதி கொடுத்த அனைத்து அரசு துறையினருக்கும் ஆர் கோல்டு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் எங்கள் நிறுவனம் சார்பில் இச்சிலை மற்றும் இப்பகுதியினை முழுமையாக, முறையாக பராமரிப்பு செய்ய உள்ளோம். இதே போன்று டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே, ஆத்துப்பாலம் மற்றும் போத்தனூர் குளம் அருகேயும் பாரம்பரிய கலை சிற்பங்களை ஏற் படுத்தவுள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த மகாபிரபு அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன் பராமரிப்பை ஆர்.கோல்டு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
ஆர்.கோல்டு அமைத்து கொடுத்த அசோக சக்கரம் சிங்கம் சிலை

Leave a Reply