ஆர்சிபி வெற்றி பேரணி: கூட்ட நெரிசலில் 11 பேர் பலி 

Spread the love

18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்று புதிய சாதனை படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பெங்களூருவில் பெரிய கூட்டம் திரண்டது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுக்கு திரண்ட பெரும்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பின்பும் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டங்கள் நீடித்து வருகின்றன.

கர்நாடக மாநில முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆளுநர் உள்ளிட்டோர் ஆர்சிபி வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நெரிசலில் உயிரிழந்த சம்பவம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வருத்தம் தெரிவித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தனது செய்திக்குறிப்பில், “ஆர்சிபி வெற்றிக்கொண்டு நடந்த கொண்டாட்டங்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்களூரு மக்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.