ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி

modi at adampur
Spread the love

பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் அமைந்துள்ள விமானப்படை தளத்துக்குச் சென்று, அங்கு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப்படை வீரர்களும் ராணுவ வீரர்களும் சந்தித்து உரையாடினார்.

இந்த சந்திப்பு குறித்து தனது சமூக ஊடகத் தளமான எக்ஸில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றிற்கு உயிரோட்டம் அளிக்கிற வீரர்களுடன் நேரில் இருக்க வேண்டும் என்பது மிகச் சிறந்த அனுபவம்,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், “நாட்டின் பாதுகாப்புக்காக நமது ஆயுதப்படைகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.