,

ஆட்சியர் ஜான் சல்லிவன் உருவாக்கிய கோவை ரேஸ்கோர்ஸ்

race course
Spread the love

கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது.
இங்கு நூற்றாண்டு பழமையான கிளப்புகள், சாரதாம்பாள் கோவில், பள்ளிகள், மருத்துவமனைகள், வணி நிறுவனங்கள், ஆட்சியர் தொடங்கி அனைத்து அரசு அதிகாரிகள் குடியிருப்புகள் உள்ளன
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேம்படுத்தப்பட்டு ரேஸ்கோர்ஸ் நடைபாதையை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
தினமும் காலையிலும், மாலையிலும் மக்கள் இங்கு நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.
ரேஸ்கோர்ஸ் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குதிரைப் பந்தயம் நடைபெறும் ஒரு இடமாக இருந்துள்ளது.
கடந்த 1815ம் ஆண்டு அன்றைய கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர் தான் ரேஸ்கோர்ஸ் சாலையை மேம்படுத்தி குதிரை பந்தய மைதானத்தை அமைத்தார்.
இந்த வரலாற்றினை மக்களுக்கு எடுத்துக்கூறி வரலாற்றை பறைசாற்றும் விதமாக தான் தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் குதிரை பந்தய சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சுங்கம் பகுதியில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ரேக்ளா பந்தய சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
குப்புசாமி நாயுடு மருத்துவமனை நிர்வாகம் இந்த சிலைகளை அமைக்க நிதி உதவி அளித்துள்ளது. அதன்படி, ஃபைபர், அலுமினியம் மற்றும் இரும்பு கொண்டு இரண்டு சிலைகளும் தயாரிக்கப்பட்டன. இந்த சிலைகளை சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் ஃப்ளேக்‌ஷிப் மீடியா நிறுவனம் வடிவமைத்தது. மேலும், பாகுபலி திரைப்பட குழுவை சேர்ந்த ஓவியர்கள் இந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டி தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர்.