அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் பத்மபூஷண் தி.சு. அவினாசிலிங்கத்தின் 122ஆவது பிறந்த நாள் விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
நிறுவனத்தின் உயர் தொழில்நுட்பக் கூடத்தில் நடைபெற்ற இந்த விழா, நிர்வாக அறங்காவலரும் வேந்தருமான டி.எஸ்.கே. மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடந்தது. விழாவில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
தி.சு. அவினாசிலிங்கத்தின் வாழ்க்கை, உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் பெண்கள் கல்விக்காக அவர் காட்டிய தொலைநோக்கு பார்வையை விவரித்தார்.
பெண்கள் கல்விக்கான நிறுவனத்தை தொடங்கிய அவினாசிலிங்கம், தனது காலத்திலேயே முன்னோடியான எண்ணங்களைக் கொண்டவர் என அவர் பாராட்டினார்.
விழாவின் தொடக்கத்தில், துணைவேந்தர் வி. பாரதி ஹரிசங்கர் வரவேற்புரையாற்றினார். விழாவில் நிர்வாக துணை அறங்காவலர் கௌரி ராமகிருஷ்ணா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
அவினாசிலிங்கத்தின் 122ஆவது பிறந்த நாள் விழா – மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

Leave a Reply